நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
உலக சுற்றுச்சூழல் தினத்தைக் குறிக்கும் வகையில், நரேலா உணவுக் கழகத்தில், மத்திய அமைச்சர் நிமுபென் பம்பானியா தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு
Posted On:
05 JUN 2025 6:05PM by PIB Chennai
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் திருமதி நிமுபென் பம்பானியா உலக சுற்றுச்சூழல் தினத்தை நினைவுகூரும் வகையில், தில்லியில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் நரேலா கிடங்கில், இன்று நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
2025-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளான பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடும் இயக்கம் நடைபெற்றது. ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகளால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்கவும், நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யவும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து பசுமை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய உணவுக் கழகத்தின் நரேலா கிடங்கு வளாகத்தில் மத்திய அமைச்சர் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களுக்கு முன்மாதிரியாக அமைந்ததுள்ளதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக உள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் பணியாளர்கள் இந்த நிகழ்ச்சியல் உற்சாகத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வடன் பங்கேற்றதற்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுப்புறங்களில் பசுமையை வளர்ப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2134268
******
AD/TS/SV/KPG/DL
(Release ID: 2134313)