இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
உடல் ஆரோக்கியத்தை கடைபிடிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வரும் ஃபிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் 25-வது பதிப்பு, சிறப்புத் திரங்கா பேரணியாக நடைபெற உள்ளது
Posted On:
31 MAY 2025 1:21PM by PIB Chennai
ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வரும் ஃபிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் 25-வது பதிப்பு, சிறப்பு மூவர்ணக் கொடி பேரணி என்று அழைக்கப்படுகிறது. இந்த சைக்கிள் பேரணி ஜூன் 1 - ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா தலைமையில் தலைநகர் தில்லியில் இந்த சிறப்புப் பேரணி நடைபெறவுள்ளது. இந்த சைக்கிள் பேரணி தில்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெறும்.
ஜூன் 3 - ம் தேதி உலக மிதிவண்டி தினமாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த சைக்கிள் பேரணி, உடற்பயிற்சியில் மிதிவண்டி ஓட்டுதல் மூலம் உடல் உறுதி பெறுவதில் பெரும் பங்களிப்பதுடன், உடல் வலிமை பெறுவதற்கும் மட்டுமின்றி, இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு ஒரு கூட்டு அஞ்சலியாகவும் நடத்தப்படுகிறது. தேசிய தலைநகரில் 1,200 - க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நாடு முழுவதும் 2,000 - க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேரணியின் ஒரு பகுதியாக, ஒடிசா மாநில ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பதி புவனேஸ்வரில் நடைபெறும் மூவர்ணக் கொடி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த முயற்சியின் அகில இந்திய முக்கியத்துவத்தை இது குறிப்பதாக உள்ளது. டாக்டர் மன்சுக் மண்டவியாவுடன் தில்லியில் நடைபெறும் பேரணியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், சர்வதேச மல்யுத்த வீரர் சரிதா மோர், பாலிவுட் நடிகை ஷர்வாரி, முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தேர்வாளர் சபா கரீம் உள்ளிட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
ஃபிட் இந்தியா இயக்கம் உடற்தகுதியை அணுகக்கூடியதாகவும், உள்ளடக்கியதாகவும், தேசபக்தியுடனும் மாற்றுவதற்கான முயற்சிகளில் மூவர்ணக் கொடி பேரணி அமைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சாலைகள் திறந்தவெளி சைக்கிள் ஓட்டுதல் பாதைகளாக மாறி வருவதாலும், குடும்பங்கள், மாணவர்கள், மற்றும் மூத்த குடிமக்கள் இதில் இணைவதாலும், இந்த முயற்சி நாட்டின் பல்வேறு மக்கள்தொகை உள்ள பகுதிகள் மற்றும் அழகிய சுற்றுலாத் தலங்கள் போன்ற இடங்களில் ஒரு சுகாதார கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறது.
2024 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சி 5,500 - க்கும் மேற்பட்ட இடங்களைத் தொட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பங்கேற்பைக் கண்டுள்ளது. இந்த இயக்கம் 3.44 பில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் பதிவுகளையும் பெற்றுள்ளது. இதற்கு சானியா மிர்சா, மிலிந்த் சோமன், இம்ரான் ஹாஷ்மி, ஜான் ஆபிரகாம், இம்தியாஸ் அலி, சங்கர் மகாதேவன் மற்றும் புகழ்பெற்ற தாரா சிங் போன்ற பிரபலங்களின் ஆதரவும் குவிந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132966
****
AD/SM/SV/RJ
(Release ID: 2133022)