விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் வெள்ளிக்கிழமை ஜம்முவுக்கு வருகை தருகிறார்

Posted On: 29 MAY 2025 6:37PM by PIB Chennai

ஜம்முவில் வெள்ளிக்கிழமை 'வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின்’ கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் மாநாட்டில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பார். அமைச்சருடன் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை; புவி அறிவியல் துறை; பிரதமர் அலுவலகம்; பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம்; அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கும் பங்கேற்பார்.

 

காரீஃப் பருவத்திற்கு முன்னதாக விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், மே 29 முதல் ஜூன் 12 வரை 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாநில அரசுகளுடன் இணைந்து வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தை  இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்)மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகின்றன.

 

இயக்கத்தின்போது, ​​விவசாயிகளுடன் நேரடியாக ஈடுபட அறிவியல் குழுக்கள் கிராமங்களுக்குச் செல்லும். இந்தப் பிரச்சாரத்தில் அனைத்து 731 கிருஷி விஞ்ஞான் மையங்கள், 113 ஐசிஏஆர் நிறுவனங்கள், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறைகளின் மாநில அளவிலான அதிகாரிகள், முற்போக்கான விவசாயிகள் மற்றும் பிற விவசாய பங்குதாரர்கள் ஈடுபடுவார்கள். இந்தப் பிரச்சாரம் பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 1.5 கோடி விவசாயிகளை நேரடியாகச் சென்றடைந்து அவர்களுடன் தொடர்புகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132437

***

AD/RB/DL


(Release ID: 2132531)
Read this release in: English , Urdu , Hindi , Nepali