நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்ஐஆர்எல் மற்றும் மஹாபிரெய்ட் நிறுவனங்கள் இணைந்து பசுமை எரிசக்திக்கான உற்பத்தி அலகை அமைக்க உள்ளன

Posted On: 29 MAY 2025 5:31PM by PIB Chennai

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான லட்சியங்களை எட்டுவதற்கான செயல்பாடுகளை விரைவுபடுத்தும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம், இன்று மும்பையில் மகாத்மா பூலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன் கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு. விக்ரம் தேவ் தத், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு. பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, மஹாபிரெய்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. பிபின் ஷிர்மாலி, அதன் செயல் இயக்குநர் திரு. விஜய்குமார் கலாம் பாட்டீல் மற்றும் இவ்விரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுதானது. இது கடந்த ஏப்ரல் 16, 2025 - ம் தேதி இந்த நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகும்.

இந்த கூட்டுத் தொழில் முயற்சி  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தின் உத்திசார் விரிவாக்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் வளமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இணைந்து செயல்படுவதில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்படும் கூட்டு முயற்சி நிறுவனம், சூரிய சக்தி, காற்றாலை, கலப்பின மின் உற்பத்தி, மிதக்கும் சூரிய சக்தி, பெஸ், பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு மற்றும் சூரிய சக்தி பூங்காக்கள் உள்ளிட்ட 2000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த கூட்டு முயற்சியின் முதல் கட்டத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு கவனம் செலுத்தப்படும். இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 5000 மெகாவாட் வரை மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த கூட்டு நிறுவனத்தின் முதலீடுகளில், 74% பங்குகள் என்ஐஆர்எல் நிறுவத்திடமும், எஞ்சியுள்ள 26% பங்குகள் மஹாபிரெய்ட் நிறுவனத்திடமும் இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், MAHAPREIT, திட்டங்களுக்கான நிலத்தை அடையாளம் காணவும் ஒதுக்கவும் உதவுவதோடு, மின்சக்தி வெளியேற்ற அமைப்பை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துவதையும் ஆதரிக்கும். மறுபுறம், NIRL விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பது, நிதி ஏற்பாடு செய்தல் மற்றும் RE திட்டங்களின் மேம்பாட்டில் உதவும்.

மின்சாரச் சட்டத்தின் பிரிவு 62 அல்லது பிரிவு 63 - ன் கீழ் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் வாயிலாக  மின்சார விற்பனையை புதிதாக அமைக்கப்படும் கூட்டுத் தொழில் நிறுவனம் மேற்கொள்ளும். இது மின் விநியோக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோர் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்படும்.

இந்த இரு நிறுவனங்கள் இடையேயான கூட்டு முயற்சி ஒப்பந்தம், நாட்டின் பசுமை எரிசக்தி உற்பத்தியில் மாற்றத்தை விரைவுபடுத்தும் என்றும், கூட்டுமுயற்சிக்கான கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும்  மத்திய நிலக்கரி அமைச்சக செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132384

******

AD/TS/SV/KPG/DL


(Release ID: 2132456)
Read this release in: English , Urdu , Hindi , Marathi