வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொலம்பியா இந்தியா எரிசக்தி பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் உரையாற்றினார்

Posted On: 06 MAY 2025 8:38PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற கொலம்பியா இந்தியா எரிசக்தி பேச்சுவார்த்தையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் உரையாற்றினார். அப்போது அவர் உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் இந்தியாவின் தலைமைப் பங்கை எடுத்துரைத்ததுடன், உள்ளடக்கிய மற்றும் சமமான பருவநிலை நடவடிக்கைகளுக்கான நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். கோயல் தனது உரையில், பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதில் அனைத்து நாடுகளின் கூட்டுப் பொறுப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார். "நாள் முடிவில், ஆற்றல் மாற்றம் என்பது நாம் அனைவரும் பங்களிக்க வேண்டிய ஒன்று. ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சி கட்டத்தின் அடிப்படையில் மாற்றத்தின் நிலை மற்றும் வேகம் வேறுபடும் என்றாலும், அர்ப்பணிப்பு உலகளாவியதாக இருக்க வேண்டும்", என்று அவர் கூறினார். பருவநிலை மாற்றம் உண்மையான, அவசரமான சவால் என்றும், ஒவ்வொரு நாடும் தனக்கென தனித்துவமான தீர்வுகளை வடிவமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

 

பாரீஸ் ஒப்பந்தத்தில், வளர்ந்த நாடுகள் அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று திரு கோயல் வருத்தம் தெரிவித்தார். இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த திரு கோயல், "உலக மக்கள் தொகையில் 17% ஆதரவளித்த போதிலும், உலகளாவிய கார்பன் உமிழ்வில் இந்தியா 3% மட்டுமே பங்களிக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்கான 200 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை  திட்டமிடப்பட்ட காலத்திற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே 2022 ஆம் ஆண்டிலேயே அடைந்தோம். கடந்த பத்தாண்டுகளில் சூரிய மின்சக்தி மட்டும் 30 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா தொடர்ந்து தனது அறிக்கைகளை யுஎன்எஃப்சிசிசிக்கு சரியான நேரத்தில் சமர்ப்பித்து உலகளாவிய இணக்கத்திற்கு ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளது”, என்று தெரிவித்தார்.

 

கரியமில வாயு வெளியேற்றத்தின் அடிப்படைக் காரணங்களை, குறிப்பாக அதீத நுகர்வு மற்றும் கழிவுகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய திரு கோயல், 500 ஜிகாவாட் இணைக்கப்பட்ட தேசிய மின் தொகுப்பின் சாதனையை எடுத்துரைத்தார். அனைத்து பிராந்திய மின் கட்டமைப்புகளை இணைக்கவும், ஒருங்கிணைந்த தேசிய மின் உள்கட்டமைப்பை உருவாக்க பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யவும் பிரதமர் திரு மோடியின் முன்முயற்சியால் இது சாத்தியமானது, என்றார் அவர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127340 

***

RB/DL


(Release ID: 2127349) Visitor Counter : 16
Read this release in: English , Urdu , Hindi , Marathi