பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய விமானப்படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் எஸ்.பி.தர்கர் ஓய்வு பெற்றார்

Posted On: 01 MAY 2025 9:40AM by PIB Chennai

ஏர் மார்ஷல் எஸ்.பி.தர்கர், இந்திய விமானப்படையில் 40 ஆண்டுக் கால  சேவையை நிறைவு செய்த நிலையில், 2025 ஏப்ரல் 30 அன்று விமானப் பணியாளர்களின் துணைத் தலைவர் பணியிலிருந்து  ஓய்வு பெற்றார்.

ஏர் மார்ஷல் தர்கர் 1985 ஜூன் 14 அன்று இந்திய விமானப்படையின் விமானியாக  நியமிக்கப்பட்டார். இந்திய விமானப்படையின் பல்வேறு விமானங்களில் 3600 மணி நேரத்திற்கும் மேலாக பறந்துள்ள  அவர்ஒரு தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர்கருவி மதிப்பீட்டு பயிற்றுவிப்பாளர் மற்றும் தேர்வாளர் ஆவார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்தியாவின் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி மற்றும் அமெரிக்காவின் ராணுவ போர் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார்.

 

அவர் தனது தொழில் வாழ்க்கையில் கிழக்கு மண்டல விமானப்  படைத் தளத்தின் கமாண்டிங்-இன்-சீஃப் அதிகாரி மற்றும் தென்மேற்கு மண்டல விமானப் படையின் மூத்த விமானப் பணியாளர் அதிகாரி உட்பட பல முக்கியமான பொறுப்புக்களை வகித்துள்ளார். அவர் கிழக்கு மண்டல தலைமையகத்தில் விமான பாதுகாப்பு தளபதி மற்றும் விமான தலைமையகத்தில் விமானப் பணியாளர்களின் துணைத் தலைவர் (பயிற்சி) பதவிகளையும் வகித்தார். இவர் பாதுகாப்பு விண்வெளி முகமையின்  முதல் தலைமை இயக்குநரும்  ஆவார்.

 

சாகசமானசிறப்பான அவரது பாராட்டத்தக்க சேவைகளை அங்கீகரிப்பதற்காக, ஏர் மார்ஷல் தர்கருக்கு 2014-ல் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், 2023 இல் பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் 2025 இல் உத்தம் யுத் சேவா பதக்கங்கள்  வழங்கப்பட்டன.

****

(Release ID: 2125654)

TS/PKV/RJ


(Release ID: 2125697) Visitor Counter : 25