உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புத்தொழிலில் ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டும் இரண்டு நாள் சுஃப்லாம் 2025 மாநாடு: உலக உணவு மையமாக உருவாதல்

Posted On: 29 APR 2025 4:39PM by PIB Chennai

உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் இணைந்து, புத்தொழிலில் ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டும் இரண்டு நாள் மாநாடு சுஃப்லாம் 2025-ஐ ஏப்ரல் 25-26 தேதிகளில் நடத்தின.

இந்த மாநாட்டில் இளம் தொழில்முனைவோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். தங்களின் உத்வேகம் தரும் பயணங்களையும் புதுமையான யோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, புத்தொழில் இந்தியா பிரதிநிதிகள்  கலந்து கொண்ட அரசு நிதியுதவி மற்றும் புத்தொழிலுக்கான கொள்கை ஆதரவு என்ற தலைப்பில் கலந்துரையாடலுடன் கூடிய தொடர்ச்சியான தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன. புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட நிதித் திட்டங்கள் மற்றும் கொள்கை முன்முயற்சிகள் குறித்த மதிப்புமிக்க ஆலோசனைகளை இந்த மாநாடு வழங்கியது.  ஐஐஎம்மும்பை பேராசிரியர் டாக்டர் டி.பிரசாத் வழங்கிய புத்தொழில் உலகில் நெகிழ்ச்சியுடன் இருத்தல் என்ற ஊக்கமளிக்கும் அமர்வு, சவால்களை நிர்வகித்தல், தொழில்முனைவோர் உணர்வைப் பராமரித்தல் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கியது.

முன்னதாக மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் இரண்டு நாள் நிகழ்வை கண்காட்சியுடன் தொடங்கி வைத்தார். தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் உட்பட 23 மாநிலங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

***

(Release ID: 2125185)

TS/GK/SG/KR/DL


(Release ID: 2125238) Visitor Counter : 13
Read this release in: Telugu , English , Urdu , Hindi