மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (I) - 2025 இன் எழுத்துத் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

Posted On: 29 APR 2025 3:34PM by PIB Chennai

2025 ஏப்ரல் 13 அன்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (I), 2025  இன் எழுத்து தேர்வு முடிவுகளின் அடிப்படையில், பின்வரும் வரிசை எண்களுடன்  8516  விண்ணப்பதாரர்கள்  நேர்காணலுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் கீழ் வரும் பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்:

(i) இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் 160 வது  பாட வகுப்பு 2026 ஜனவரியில் தொடங்கும் (ii) இந்திய கடற்படை அகாடமி, எழிமாலா, கேரளா, 2026 ஜனவரியில் பாட வகுப்புத் தொடங்கும் (iii) விமானப்படை அகாடமி, ஹைதராபாத் பயிற்சி வகுப்பு 2026 ஜனவரி இல் தொடங்குகிறது (iv) அதிகாரிகள் பயிற்சி நிறுவனம், சென்னை 123 வது  (ஆண்கள்) படிப்பு 2026 ஏப்ரல் இல் தொடங்குகிறது. (v) அதிகாரிகள் பயிற்சி நிறுவனம், சென்னை, 37 வது  பெண்கள் (தொழில்நுட்பம் அல்லாத) படிப்பு 2026 ஏப்ரல் மாதம் சேர்க்கைத் தொடங்குகிறது.

பட்டியல்களில் இடம் பெற்றுள்ள அனைத்து தேர்வர்களின் விண்ணப்ப நிலை தற்காலிகமானது. தேர்வில் சேருவதற்கான நிபந்தனைகளுக்கு இணங்க, அவர்கள் வயது (பிறந்த தேதி), கல்வித் தகுதிகள், என்.சி.சி (சி) (இராணுவப் பிரிவு / மூத்த பிரிவு விமானப் பிரிவு / கடற்படை பிரிவு) போன்றவற்றின் அடிப்படையில் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்று, ராணுவமாக (ஐ.எம்.ஏ / ஓ.டி.ஏ) முதல் தேர்வாக வழங்கப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணலுக்கான அழைப்புத் தகவலைப் பெற உதவும் பொருட்டு ஆட்சேர்ப்பு இயக்குநரக இணையதளத்தில் www.joinindianarmy.nic.in தங்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125156

***

TS/GK/SG/KR


(Release ID: 2125209) Visitor Counter : 21
Read this release in: English , Urdu , Hindi , Gujarati