சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலாவது ஸ்வாப் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது
Posted On:
24 APR 2025 9:39AM by PIB Chennai
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், எய்ம்ஸ் ராய்ப்பூர் தனது முதலாவது ஸ்வாப் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இது சிறுநீரக இணை மாற்று அறுவை சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. இந்த சாதனையானது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் முதலாவதாகவும் இந்த சிக்கலான மற்றும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சத்தீஸ்கரின் முதல் அரசு மருத்துவமனையாகவும் அமைந்ள்ளது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் புதுமையான சிகிச்சை முறைகளுடன் நோய்க்கான தீர்வுகளை வழங்குவதற்கும் இந்த அறுவை சிகிச்சை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் மூலம் இது போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 15% அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தேசிய திசு மாற்று அமைப்பு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்று தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மிகவும் திறம்பட மேற்கொள்ளும் வகையில் ஒரு நாடு ஒரே மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை செயல்படுத்தவும் இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
***
(Release ID: 2123988)
TS/SV/RR/KR
(Release ID: 2124009)