நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-25 ஆம் ஆண்டில் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் புதிய தனியார் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியது

இடுகை இடப்பட்ட நாள்: 22 APR 2025 7:34PM by PIB Chennai

தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) 2024-25 ஆம் ஆண்டில் 12 லட்சத்திற்கும் அதிகமான தனியார் துறை சந்தாதாரர்கள் சேர்க்கையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது, மார்ச் 2025 க்குள் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 165 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

 

சிறார்களுக்காக வடிவமைக்கப்பட்ட என்பிஎஸ் வாத்சல்யா திட்டம், செப்டம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை பதிவு செய்துள்ளது.

 

என்பிஎஸ் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம்  இரண்டிற்குமான  நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் 2024-25 ஆம் ஆண்டில் 23 சதவீதம் அதிகரித்து மார்ச் 2025 இறுதிக்குள் ரூ .14.43 லட்சம் கோடியாக விரிவடைந்துள்ளது.

------

RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2123645) வருகையாளர் எண்ணிக்கை : 53
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Marathi , English , Urdu