நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேரடிப் பணப்பரிவர்த்தனைகள் நாட்டின் நலத்திட்டங்களை திறம்படச் செயல்படுத்த உத்வேகம் அளிக்கின்றன

Posted On: 21 APR 2025 5:01PM by PIB Chennai

ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளையின் புதிய மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் நேரடி பணப்பரிமாற்ற நடைமுறைகள், அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் இடையூறின்றி நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு சென்றடையச் செய்வதன் மூலம் 2024-ம் ஆண்டு வரை ரூ.3.48 லட்சம் கோடி அளவிற்கு சேமிக்க உதவியுள்ளது. இந்த நேரடி பணப்பரிமாற்ற முறை அமல்படுத்தப்பட்டதிலிருந்து அரசின் மொத்த செலவினங்களில் மானியத்திற்கான ஒதுக்கீடுகள் 16 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இது பொதுச் செலவினங்களைக் குறைத்து வளர்ச்சித் திட்டங்களை திறம்பட மேற்கொள்வதற்கு உதவுவதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

பட்ஜெட்டில் மானியத்திற்கான ஒதுக்கீடுகள் மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பயனாளிகளை சென்றடையச் செய்வதில் நேரடிப் பணப்பரிமாற்ற முறையும் செயல் திறன் குறித்த தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. 2009-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலத்தில் நிதிசார் செயல்பாடுகளின் தரவுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காகிதப் பயன்பாடு  அடிப்படையிலான நிதிசார் நடவடிக்கைகளிலிருந்து நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறுவதன் மூலம் நலத்திட்ட உதவிகள் எவ்வித இடையூறுமின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்துள்ளது என்பதை இந்தத் தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஜன் தன் வங்கிக் கணக்குகள், ஆதார் தனித்துவ அடையாள எண்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றை இணைப்பது நேரடி பணப்பரிமாற்றத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இது  டிஜிட்டல் கட்டமைப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123192

----

TS/SV/KPG/KR/DL


(Release ID: 2123256)