நிலக்கரி அமைச்சகம்
சுரங்கப் பணிகளில் பேஸ்ட் ஃபில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் நிலக்கரி பொதுத்துறை நிறுவனமாகிறது எஸ்இசிஎல்
Posted On:
18 APR 2025 3:01PM by PIB Chennai
சௌத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இசிஎல்) நிறுவனம், நிலக்கரி சுரங்கங்களில் பேஸ்ட் ஃபில் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் நிலக்கரி பொதுத்துறை நிறுவனமாக மாற உள்ளது. இது நிலையான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சுரங்க நடைமுறைகளை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய படியாகும்.
இந்தப் புதுமையான நிலத்தடி சுரங்கத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த, எஸ்இசிஎல் நிறுவனம், டிஎம்சி மினரல் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.7040 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கோர்பா பகுதியில் அமைந்துள்ள எஸ்இசிஎல்-ன் சிங்காலி நிலக்கரி சுரங்கத்தில் பேஸ்ட் ஃபில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் நிலக்கரி உற்பத்தி மேற்கொள்ளப்படும். 25 ஆண்டுகளில், இந்த திட்டத்தின் மூலம் சுமார் 8.4 மில்லியன் டன் (84.5 லட்சம் டன்) நிலக்கரியை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேஸ்ட் ஃபில் தொழில்நுட்பம் என்றால் என்ன?:
பேஸ்ட் ஃபில் என்பது ஒரு நவீன நிலத்தடி சுரங்க முறையாகும். இது மேற்பரப்பு நிலம் தொடர்பான தேவையை நீக்குகிறது. இந்த செயல்முறை நிலம் சரிவதைத் தடுக்கிறது மற்றும் சுரங்கத்தின் கட்டமைப்பு நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. முக்கியமாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கழிவு மறுசுழற்சியை ஊக்குவிக்கிறது.
***
(Release ID: 2122660)
SV/PLM/RJ
(Release ID: 2122693)