நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி இறக்குமதி கண்காணிப்பு அமைப்பு போர்ட்டலுக்கான பதிவு கட்டணத்தை சீரமைத்தது நிலக்கரி அமைச்சகம்

Posted On: 17 APR 2025 3:15PM by PIB Chennai

நிலக்கரி இறக்குமதி கண்காணிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை வலுப்படுத்தும் நடவடிக்கையாக நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி இறக்குமதி கண்காணிப்பு அமைப்பு போர்ட்டலை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

நிலக்கரி இறக்குமதி அறிக்கையை ஒழுங்குபடுத்துவதற்காக இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இது, பயனுள்ள கொள்கை உருவாக்கம், துறை பகுப்பாய்வுக்கு துல்லியமான தரவை உறுதி செய்கிறது. நிலக்கரி இறக்குமதியாளர்கள், இந்திய துறைமுகத்திற்கு சரக்குகள் வரும்போதோ அல்லது அதற்கு முன்போ இந்த இணையதளத்தில் தங்கள் சரக்குகளின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

வர்த்தகம் செய்வதை எளிமையாக்கவும், இறக்குமதி கண்காணிப்பு தளங்களில் ஒரே விதமான தன்மையை உறுதி செய்யவும், நிலக்கரி அமைச்சகம் இந்த இணையதளத்தின் பதிவுக் கட்டணத்தை சீரமைத்துள்ளது.

ஒரு சரக்குக்கு ரூ.500 என்ற நிலையான விகிதத்தில் திருத்தி அமைக்கப்பட்டுள்ள பதிவுக் கட்டணம் 2025 ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இறக்குமதியாளர்கள் இந்த இணையதள மூலம் தானியங்கி பதிவு எண்ணைப் பெற வேண்டும், இது சுங்க அனுமதியின் போது நுழைவுச் சீட்டாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122395

***

TS/GK/SG/KR

 


(Release ID: 2122446)
Read this release in: English , Urdu , Hindi , Telugu