சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நீடித்த பேக்கேஜிங் குறித்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தேசிய ஆலோசனைக் கூட்டம் – மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தொடங்கி வைத்தார்
Posted On:
17 APR 2025 10:38AM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ், நேற்று (16.04.2025) மும்பையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஏற்பாடு செய்திருந்த "உணவு வணிகத்திற்கான நிலையான பேக்கேஜிங்: வளர்ந்து வரும் உலகளாவிய சூழல்களும் ஒழுங்குமுறை கட்டமைப்பும்" என்ற தலைப்பில் தேசிய ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதில் உரையாற்றிய அமைச்சர், உணவுப் பொருட்களின் நீடித்த பேக்கேஜிங்கின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பேக்கேஜிங்கில் மறுசுழற்சி செய்யக் கூடிய ஆர்பெட்-ஐ (rPET) பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் விரிவான ஆலோசனை களுக்குப் பிறகு சிறந்த உலகளாவிய நடைமுறைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார். உணவுப் பொருட்களை எளிதாக அடையாளம் காணவும், நுகர்வோருக்குப் பயனளிக்கும் வகையிலும் ஒரு அடையாளச் சின்னம்(லோகோ) உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிலையான பேக்கேஜிங் முறைகளுக்கு மாறுவது காலத்தின் தேவை என்று அவர் கூறினார். பிளாஸ்டிக் பயன்பாடு உலகளவில் வளர்ந்து வரும் கவலையாக உருவெடுத்துள்ளது எனவும், இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நிலையான, மறுசுழற்சி செய்யக்கூடிய, மக்கும் தன்மையுடன் கூடிய மாற்றுப் பொருட்களை நோக்கி நகர்வதே இதற்கான தீர்வாக அமையும் என்று அவர் மேலும் கூறினார்.
***
(Release ID: 2122326)
TS/PLM/RR/KR
(Release ID: 2122364)