தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 220 படுக்கைகள் கொண்ட ஈஎஸ்ஐசி மருத்துவமனையை டாக்டர் மன்சுக் மாண்டவியா நாளை திறந்து வைக்கிறார்
Posted On:
16 APR 2025 4:14PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள நம்கும்மில் புதிதாக கட்டப்பட்டுள்ள 220 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை நாளை (2025 ஏப்ரல் 17) திறந்து வைக்கிறார். இந்த அதிநவீன மருத்துவ வசதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் சுகாதாரச் சேவைகள் வழங்குவதை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத் மாநிலங்களவை உறுப்பினர், திரு. பிரதீப் வர்மா, ராஞ்சி கிஜ்ரி சட்டப் பேரவை உறுப்பினர் திரு. ராஜேஷ் கச்சாப் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது, டாக்டர் மாண்டவியா இஎஸ்ஐ பயனாளிகளை பாராட்டி பண பலன்கள் சான்றிதழ்கள் / அனுமதி கடிதங்களை வழங்குவார். மருத்துவமனை கட்டுமானப் பணியில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர்களையும் அவர் கவுரவிக்க உள்ளார். 2018-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் தற்போது 220 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 2024 அக்டோபர் மாதத்தில் 50 எம்.பி.பி.எஸ் இடங்களுடன் ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவ இஎஸ்ஐ நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இதற்கான ஆரம்ப கட்ட செயல்பாடுகள் எதிர்காலத்தில் தொடங்கப்பட உள்ளன.
***
(Release ID: 2122101)
TS/IR/RR/KR
(Release ID: 2122117)