ஜவுளித்துறை அமைச்சகம்
மத்திய அரசு தனது ஒருங்கிணைப்பு முகமை மூலம் 100 லட்சம் பேல்கள் பருத்தியை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்கிறது
Posted On:
08 APR 2025 3:27PM by PIB Chennai
2025 மார்ச் 31 வரையிலான பருத்தி பருவத்தில், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பருத்திக் கழகம் லிமிடெட் முகமை மூலம் இந்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் 100 லட்சம் பேல்களுக்கு சமமான 525 லட்சம் குவிண்டால் விதை பருத்தியை வெற்றிகரமாகக் கொள்முதல் செய்துள்ளது. இந்த கொள்முதல் நாட்டின் மொத்த பருத்தி கொள்முதலான 263 லட்சம் பேல்களில் 38% ஆகும்.
மாநிலங்களில் அதிகபட்சமாக தெலங்கானாவில் 40 லட்சம் பேல்களும், மகாராஷ்டிராவில் 30 லட்சம் பேகளும், குஜராத்தில் 14 லட்சம் பேல்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பருத்தி உற்பத்தி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் சுமார் 21 லட்சம் பருத்தி விவசாயிகளுக்கு மொத்தம் ₹37,450 கோடி வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையானது, பருத்தி விவசாயிகளுக்கு லாபகரமான விலையை தொடர்ந்து வழங்குகிறது. சந்தை விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே வீழ்ச்சியடையும் போது பாதிப்பிலிருந்து அவர்களை இது பாதுகாக்கிறது. திறமையான கொள்முதலை எளிதாக்க, இந்தியப் பருத்திக் கழகம் லிமிடெட் நாடு முழுவதும் 508 கொள்முதல் மையங்களைத் திறந்துள்ளது.
நியாயமான, வெளிப்படையான, திறன் வாய்ந்த கொள்முதல் நடைமுறை மூலம் பருத்தி விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
***
(Release ID: 2120025)
TS/PLM/AG/KR
(Release ID: 2120071)