சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரத்த சோகை இல்லாத பாரதம் பற்றிய கூடுதல் தகவல்

प्रविष्टि तिथि: 01 APR 2025 2:14PM by PIB Chennai

வாழ்க்கை சுழற்சி அணுகுமுறையில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், பெண்களை பாதிக்கும்  ரத்த சோகையை குறைப்பதற்காக மத்திய அரசு ரத்த சோகையில்லாத பாரதம்  இயக்கத்தை வலுப்படுத்த ஆறு புதிய உத்திகளை செயல்படுத்துகிறது.

இதற்காக தேசிய சுகாதார இயக்கத்தால் மாநிலங்களுக்கு வருடாந்திர அமலாக்கத் திட்டங்கள் அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், 2024-25 நிதியாண்டில், ரத்த சோகை இல்லாத பாரதம் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.805.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் பொது விநியோகத் துறையிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளைச் சமாளிக்க அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும்  பொது விநியோக முறை, பிரதமரின் ஊட்டச்சத்து இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள், மற்றும் பிற நலத்திட்டங்கள் மூலம் வைட்டமின் பி-12 இரும்பு சத்து  கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசியை அரசு வழங்குகிறது.

இத்தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக  அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2117215)

TS/GK/AG/SG


(रिलीज़ आईडी: 2117308) आगंतुक पटल : 49
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali