ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்
Posted On:
01 APR 2025 10:07AM by PIB Chennai
நாடு முழுவதும் பட்டுப்புழு வளர்ப்புத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மத்திய பட்டு வாரியம் மூலம் அரசு ரூ.4,679.85 கோடி செலவில் பட்டு சமக்ரா-2 திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் 60 சதவீத பெண் பயனாளிகளின் பங்களிப்பைக் கொண்டுள்ளது.
பட்டு சமக்ரா, பட்டு சமக்ரா-2, வடகிழக்கு பிராந்திய ஜவுளி ஊக்குவிப்புத் திட்டம் போன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், பெண் பயனாளிகள் உள்ளிட்டோருக்கு, உதவி, பயிற்சி மற்றும் ஆதரவு மாநிலங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
பட்டு உட்பட பல்வேறு ஜவுளித் துறைகளில் திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சித் திட்டத்தை ஜவுளி அமைச்சகம் செயல்படுத்துகிறது. 2021-22 முதல், இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் உட்பட 7,985 பயனாளிகளுக்குப் பட்டுத் துறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்டு வாரியம் மூலம் சந்தைப்படுத்தல் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆதரவை மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்கி வருகிறது. கூடுதலாக, மத்திய பட்டு வாரியம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் உட்பட இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்கள் ஆகியவற்றின் ஆதரவுடன், கண்காட்சிகள் போன்ற பல சந்தைப்படுத்தல் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்தார்.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்தார்.
***
(Release ID: 2117107)
TS/GK/AG/SG
(Release ID: 2117190)
Visitor Counter : 30