பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

10.80 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிரின் பங்களிப்புடன் நாடு முழுவதும் 812 மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்படுகின்றன

Posted On: 26 MAR 2025 3:47PM by PIB Chennai

மிஷன் சக்தி என்ற இயக்கத்தின் கீழ் ஒன் ஸ்டாப் சென்டர் என்ற ஒற்றைச் சாளர மகளிருக்கான சேவைகளை வழங்கும் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துயரத்தில் உள்ள மகளிருக்கு, ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைந்த ஆதரவையும் உதவியையும் வழங்குகிறது.

மேலும், இப்பெண்களுக்கு மருத்துவ உதவி, சட்ட உதவி, ஆலோசனை, தற்காலிக தங்குமிடம், காவல்துறை உதவி, உளவியல்-சமூக ஆலோசனை போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 812 அரசு ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தொடங்கப்பட்டதிலிருந்து (01.04.2015) தற்போது வரை (31.01.2025) 10.80 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவியுள்ளன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/SG/KR/DL


(Release ID: 2115425) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Bengali , Hindi