கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை வலுப்படுத்துதல்

Posted On: 19 MAR 2025 3:01PM by PIB Chennai

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை வலுப்படுத்த மத்திய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் கூட்டுறவுத் துறையில் செயல்படும் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு இறுதித் தொகையை வழங்குகின்றன, இது பெரும்பாலும் இறுதி கரும்பு விலை என்று குறிப்பிடப்படுகிறது, இது கரும்பு கட்டுப்பாட்டு ஆணை, 1996-ன் கீழ் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையை விட அதிகமாகும்.

சர்க்கரைத் துறையில் கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவிக்கவும், பிரிவு 36-ன் துணைப்பிரிவு (1)-ஐ திருத்துவதற்கு ஒரு புதிய விதி (xvii) சேர்க்கப்பட்டது

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மீதான வருமான வரி கோரிக்கை தொடர்பாக பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறையை மத்திய நேரடி வரிகள் வாரியம் 27.07.2023 அன்று வெளியிட்டுள்ளது.

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை வலுப்படுத்த என்சிடிசி மூலம் ₹10,000 கோடி கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 2022-23, 2024-25 நிதியாண்டுகளில் என்சிடிசிக்கு ₹1,000 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு எத்தனால் கொள்முதல் செய்வதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2112725)

TS/PLM/AG/KR


(Release ID: 2112891)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati