பாதுகாப்பு அமைச்சகம்
கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக நியூசிலாந்து கடற்படையின் தளபதி இந்தியா வருகை
प्रविष्टि तिथि:
18 MAR 2025 5:31PM by PIB Chennai
ராயல் நியூசிலாந்து கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் கரின் கோல்டிங், இந்தியா – நியூசிலாந்து நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே கடல்சார் ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக இம்மாதம் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். புதுதில்லி, மும்பையில் நடைபெறும் உயர்நிலை அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்று கடல்சார் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.
மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற ரைசினா மாநாட்டில் நியூசிலாந்து கடற்படை தளபதி ரியர் அட்மிர்ல் கரின் கோல்டிங் கலந்து கொண்டார். இன்று (மார்ச் 18 ) அவர் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, இருநாட்டுக் கடற்படைகளுக்கு இடையேயான நல்லுறவுகளை மேம்படுத்துதல், கூட்டுப் பயிற்சி, கடல்சார் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மும்பை செல்லும் நியூசிலாந்து கடற்படை தளபதி அங்குள்ள மேற்கு கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடுகிறார். உள்நாட்டு போர்க் கப்பலான ஐஎன்எஸ் சூரத்தை அவர் பார்வையிடுகிறார். கப்பல் பராமரிப்பு, தொழில்நுட்பத்தில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். மார்ச் 20-ம் தேதி, இந்தியா-நியூசிலாந்து இடையேயான கடல்சார் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், நியூசிலாந்து பிரதமர் ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112362
---
TSSVKPGDL
(रिलीज़ आईडी: 2112504)
आगंतुक पटल : 30