கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கலை, கலாச்சாரத்தை ஊக்குவிக்க உலகளாவிய திட்டம்

Posted On: 17 MAR 2025 3:54PM by PIB Chennai

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும், இந்தியாவின் உலகளாவிய தோற்றத்தை மேம்படுத்தவும் கலாச்சார அமைச்சகம் "உலகளாவிய ஈடுபாட்டு திட்டத்தை" செயல்படுத்துகிறது.

அயல்நாடுகளுடனான கலாச்சார உறவுகளை வலுப்படுத்துதல், இருதரப்பு கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துதல், இந்தியாவின் கலாச்சார அடையாளத்தை உலக அரங்கில் முன்னிலைப்படுத்துதல், சுற்றுலாவை ஊக்குவித்தல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். உலகளாவிய ஈடுபாட்டுத் திட்டம் அதன் நோக்கத்தை அடைய வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம், 'இந்தியாவின் விழாக்கள்' நடத்தப்படுகின்றன.

இந்தியாவிற்கும் சம்பந்தப்பட்ட அயல்நாடுகளுக்கும் இடையே நெருங்கிய நட்புறவையும் கலாச்சார தொடர்புகளையும் வளர்க்கும் நோக்கத்துடன், நமது இந்திய தூதரகங்கள் மூலம் அயல்நாடுகளில் செயல்படும் இந்திய அயல்நாட்டு நட்புறவு பண்பாட்டு சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் - சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

***

TS/PLM/AG/DL


(Release ID: 2111992) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi