பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மத்திய அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி, அசாமின் திப்ருகாருக்கு பயணம் மேற்கொண்டார்
Posted On:
16 FEB 2025 7:22PM by PIB Chennai
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி, அசாமின் தொழில்துறை தலைநகரான திப்ருகாருக்கு பயணம் செய்து, மாநிலத்தில் பல்வேறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.
திருமதி அன்னபூர்ணா தேவி, பெண்களுக்கான நிலையான வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வலுவூட்டலை வளர்ப்பதில் சமூகப் பங்களிப்பை ஊக்குவித்தார். அடிமட்டத் தொழிலாளர்களின் இடைவிடாத முயற்சிகளைப் பாராட்டிய அவர், திறன் மேம்பாடு மற்றும் நிதி சுதந்திரத்திற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் தொடர்ந்து அரசின் ஆதரவை உறுதி செய்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் முதல்வர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான இரட்டை என்ஜின் அரசின் மாதிரியின் கீழ் அசாமின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த அமைச்சர், குழந்தை திருமணத்தைத் தடுப்பதிலும், தாய்்்் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்துவதிலும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு திட்டங்களின் மூலம் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதிலும் மாநிலத்தின் குறிப்பிடத்தக்க முயற்சிகளைப் பாராட்டினார்.
"கடந்த தசாப்தத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், அசாம் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளது, சிறந்த இணைப்பு, சுகாதார வசதிகள் மற்றும் அதன் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளது" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103848
(Release ID: 2103848)
(Release ID: 2103985)