பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரும் பிரான்ஸ் அதிபரும் கூட்டாக ஐடிஇஆர் அணுஉலையைப் பார்வையிட்டனர்

Posted On: 12 FEB 2025 5:00PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மக்ரோனும் இன்று கடராச்சியில் உள்ள சர்வதேச வெப்ப அணுக்கரு பரிசோதனை உலையை (ஐடிஇஆர்) கூட்டாகப் பார்வையிட்டனர். தலைவர்களை ஐடிஇஆர் தலைமை இயக்குநர் வரவேற்றார். இன்று உலகின் மிகவும் லட்சிய அணுக்கரு இணைவு எரிசக்தி திட்டங்களில் ஒன்றான ஐடிஇஆர்-க்கு எந்தவொரு நாட்டின் தலைவரோ அல்லது அரசாங்கத் தலைவரோ வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வருகையின் போது, உலகின் மிகப்பெரிய டோகோமாக்கின் அசெம்பிளி உட்பட, எரியும் பிளாஸ்மாவை உருவாக்குதல், உள்ளடக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் மூலம் இறுதியில் 500 மெகாவாட் இணைவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதை தலைவர்கள் பாராட்டினர்.  திட்டத்தில் பணிபுரியும் ஐடிஇஆர் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பையும் தலைவர்கள் பாராட்டினர்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தத் திட்டத்திற்கு பங்களிக்கும் ஏழு ஐடிஇஆர் உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாகும். சுமார் 200 இந்திய விஞ்ஞானிகள், எல் அண்ட் டி, ஐனாக்ஸ் இந்தியா, டிசிஎஸ், டிசிஇ, எச்சிஎல் டெக்னாலஜிஸ் போன்ற குறிப்பிடத்தக்க தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஐடிஇஆர் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

***

(Release ID: 2102336)
TS/PKV/RR/KR


(Release ID: 2102396) Visitor Counter : 47