ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிராமப்புற வாழ்வாதாரம் உயர்வு

Posted On: 07 FEB 2025 4:26PM by PIB Chennai

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் என்பது நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திட்டமாகும். ஒவ்வொரு நிதியாண்டிலும் வயது வந்த உறுப்பினர்கள் தொழில் திறமையற்ற ஆனால் உடல் உழைப்பைத்  தருவதற்கு தயாராக உள்ள  ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது நூறு நாட்கள் உத்தரவாதமான கூலி வேலைவாய்ப்பை இந்த திட்டம் வழங்குகிறது.  இது  தேவை சார்ந்த கூலி வழங்கும் வேலைவாய்ப்புத் திட்டமாகும்.

 

தொழிலாளர்களின் திறன் தளத்தை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசு டிசம்பர் 2019-ல் உன்னதி திட்டத்தைத் தொடங்கியது. தொழிலாளர்களின் திறன் தளத்தை மேம்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விரும்புகிறது, இதனால் அவர்கள் சுயதொழில் அல்லது கூலி வேலைவாய்ப்பு மூலம் தற்போதைய பகுதி வேலைவாய்ப்பிலிருந்து முழு வேலைவாய்ப்புக்கு மாற முடியும். இந்தத் திட்டம் 2 லட்சம்  தொழிலாளர்களின் திறன் தளத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை மொத்தம் 82,799 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது (31.12.2024 நிலவரப்படி).

 

மேலும், இந்த அமைச்சகம், தீனதயாள் அந்த்யோதயா திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM) என்ற பெருந் திட்டத்தின் கீழ், நாட்டில் வறுமையை ஒழிக்கும் நோக்கில், கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் துறையில் இரண்டு நலத்திட்டங்களையும் செயல்படுத்துகிறது.

 

இந்த தகவலை மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100660

***

TS/PKV/RJ/DL


(Release ID: 2100824) Visitor Counter : 52


Read this release in: Urdu , English , Hindi