புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மெட்டாடேட்டா அமைப்பு 2.0 ஒரே மாதிரியான தரவு மற்றும் தகவலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

Posted On: 03 FEB 2025 3:31PM by PIB Chennai

தேசிய மெட்டாடேட்டா அமைப்பு 2.0 ஒரே மாதிரியான தரவு மற்றும் தகவல் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும், தரவுகளின் ஆதாரங்கள், சேகரிப்பு முறைகள், தரவுத் தொகுப்புகளின் கண்டுபிடிப்புத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு, ஆய்வுக் கணக்கெடுப்புகள், நிர்வாகம் மற்றும் பிற ஆதாரங்களில் உள்ளது போன்றே பொதுக் களத்திலும் பல்வேறு தரவு தொகுப்புகளுக்கு மேம்பட்ட புரிதலை வழங்க இது வகை செய்கிறது.

 

தேசிய மெட்டாடேட்டா அமைப்பு 2.0-ஐ செயல்படுத்துவதற்காக அமைச்சகங்கள்/துறைகளுடன் இது தொடர்பான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. மத்திய  புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் புள்ளியியல் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதன் அடிப்படையில் செயலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

 

இது தொடர்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க இணை அமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099124

***

TS/SV/RJ/KR


(Release ID: 2099184) Visitor Counter : 37


Read this release in: English , Urdu , Hindi