பிரதமர் அலுவலகம்
திருமதி துளசி கௌடா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
17 DEC 2024 10:23AM by PIB Chennai
கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான திருமதி துளசி கவுடா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான திருமதி துளசி கவுடாவின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இயற்கையை பேணி வளர்ப்பதற்கும், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அவர் இருப்பார். அவரது பணியானது நமது பூமியைப் பாதுகாக்க எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், சுற்றதாருக்கும் இரங்கல். ஓம் சாந்தி."
***
TS/IR/KV/KR
(Release ID: 2085160)
Visitor Counter : 38
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam