ஜல்சக்தி அமைச்சகம்
கோபர்தன் முன்முயற்சியின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் ஆய்வு செய்தார்
Posted On:
04 DEC 2024 2:04PM by PIB Chennai
கோபர்தன் முன்முயற்சியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல், புதுதில்லியில் ஒன்பது அமைச்சகங்கள் / துறைகளின் பிரமுகர்களுடன் கலந்துரையாடினார்.
கரிமக் கழிவுகளை இயற்கை உரம் போன்ற மதிப்புமிக்க வளங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கோபர்தன் முயற்சிக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவம் இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திரு பாட்டீல், நிலைத்தன்மைக்கும் சுழற்சிப் பொருளாதாரத்திற்குமான அரசின் உறுதிப்பாட்டை கோபர்தன் முன்முயற்சி எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளுக்கான ஒருங்கிணைந்த பதிவு இணையதளம் https://gobardhan.sbm.gov.in ஆகும்.
***
TS/PLM/AG/KV
(Release ID: 2080658)