பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறந்த நிர்வாகத்திற்கான 25 - வது தேசிய இணையவழிக் கருத்தரங்குகள்

Posted On: 30 NOV 2024 12:48PM by PIB Chennai

 

தலைசிறந்த நிர்வாக நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்வதற்கும், அதனைப் பின்பற்றுவதற்கும் உதவிடும் வகையில் சிறந்த நிர்வாகத்திற்கான 25 - வது தேசிய இணையவழிக் கருத்தரங்குகள் - 25- 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 - ம் தேதி அன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர அதிகாரிகளுடன் மெய்நிகர் மாநாடுகள் / இணையவழிக் கருத்தரங்குகளை நடத்துமாறு மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமரின் விருதுகளைப் பெற்றவர்கள் இதில் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அறிவுறுத்தல்களையடுத்து, பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்க்காக பிரதமரின் விருதுகளைப்                 பெற்றவர்கள் அளிக்கும் பரிந்துரைகளைப் பரப்புவதையும், பின்பற்றுவதையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை [DARPG] 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய இணையவழிக் கருத்தரங்குகளை மாதந்தோறும் நடத்தி வருகிறத. ஒவ்வொரு இணையவழிக் கருத்தரங்கிலும் சம்பந்தப்பட்டத் துறைகள், மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநில நிர்வாகப் பயிற்சி மையங்கள் மற்றும் மத்திய பயிற்சி மையங்களிலிருந்து  சுமார் 1000 அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த இணையவழிக் கருத்தரங்குகள் நிறுவனமயமாக்கல் / நிலைத்தன்மையின் தற்போதைய நிலையை முன்னிறுத்துவதுடன், அதன் பிரதிபலிப்பு / விரிவாக்கத்தின் நிலை குறித்த நுண்ணறிவுகளையும் வழங்குகின்றன.

25வது இணையவழிக் கருத்தரங்குகள் 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 - ம் தேதி அன்று நடைபெற்றது, இதில் "India@100 – நிர்வாக சீர்திருத்தங்கள்" என்ற தலைப்பில் சர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் உரை நிகழ்த்தினார்.

இந்த இணையவழிக் கருத்தரங்கிற்கு சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய இணையவழிக் கருத்தரங்கு அமைப்பின் தலைமை இயக்குநர் திரு சுரேந்திரகுமார் பாக்டே மற்றும் DARPG கூடுதல் செயலாளர் திரு புனீத் யாதவ் ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். மேலும் இந்த கருத்தரங்கில் துறையின் இணைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் 824 இடங்களில் நடைபெற்ற இந்த இணையவழிக் கருத்தரங்கில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் நிர்வாக சீர்திருத்தத் துறைகளின் மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள், மத்திய, மாநில நிர்வாக பயிற்சி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079318

*****

VS/KV

 

 

 

 


(Release ID: 2079343)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi