பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாநில உதய தினத்தை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2024 9:07AM by PIB Chennai

 

கன்னட ராஜ்யோத்சவா எனப்படும் கர்நாடக மாநில உதய நாளையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"கன்னட ராஜ்யோத்சவா என்பது கர்நாடகாவின் முன்மாதிரியான கலாச்சாரம் மற்றும் மரபுகளை அங்கீகரிக்கும் ஒரு சிறப்பு சந்தர்ப்பமாகும். இந்த மாநிலம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் சிறந்த மனிதர்களைப் பெற்றுள்ளது.  கர்நாடக மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடனும் வெற்றியுடனும் திகழ வேண்டுமென வாழ்த்துகிறேன்".

 

***

TS/PKV/RR/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2069988) வருகையாளர் எண்ணிக்கை : 77