ஆயுஷ்
'ஆயுர்வேத தினம் 2024'ஐ அக்டோபர் 29 அன்று 150 நாடுகள் கொண்டாட உள்ளன
Posted On:
23 OCT 2024 4:57PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகம் 29.10.2024 அன்று 9-வது ஆயுர்வேத தினத்தை கொண்டாட உள்ளது. இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகள் "உலகளாவிய ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேத கண்டுபிடிப்புகள்" என்ற கருப்பொருளில் ஆயுர்வேத தினத்தைக் கொண்டாட தயாராகியுள்ளன. இந்த தினத்தையொட்டி, புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் ஆயுஷ் அமைச்சகம் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய உள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுர்வேத தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், "ஆயுர்வேத தினம் தற்போது இப்போது உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது. 2024 ஆயுர்வேத தின கொண்டாட்டங்களில் 150 நாடுகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அறிந்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
பொதுமக்களின் நலனுக்காக ஆயுர்வேதத்தை ஒரு வலுவான மருத்துவ முறையாக உலகளவில் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். இதன் கீழ், அனைத்து இந்திய ஆயுர்வேத நிறுவனம் நாடு முழுவதும் ஒரு மாத கால திட்டத்தை தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடெச்சா பேசியபோது, "ஆயுர்வேத தின கொண்டாட்டங்கள் மூலம், ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதத்தை சமகால அறிவியலுடன் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்தார்.
அமைச்சகத்தின் சமீபத்திய முயற்சிகள் குறித்து பேசிய அவர், "ஆயுர்கியான் திட்டம், ஆயுஷ் ஆராய்ச்சி தளம் மற்றும் நமஸ்தே தளம் போன்ற முக்கிய முயற்சிகள் உட்பட ஆயுஷ் கட்டமைப்பின் கீழ் பல டிஜிட்டல் தளங்கள் மூலம் ஆயுர்வேத அம்சங்களை பொதுமக்கள் வசதியாக அணுகமுடிகிறது" என்று கூறினார். தற்போது, ஆயுர்வேதம் உலகெங்கிலும் 24 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆயுர்வேத தயாரிப்புகள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067357
***
TS/IR/RS/DL
(Release ID: 2067422)