தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான 'இஷ்ரம்-ஓரிடத் தீர்வை' டாக்டர் மன்சுக் மாண்டவியா 2024, அக்டோபர் 21 அன்று தொடங்கிவைக்கிறார்

Posted On: 20 OCT 2024 1:29PM by PIB Chennai

 

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு சமூகத் துறை திட்டங்களை அணுகுவதற்கு ஓரிடத் தீர்வாக  இஷ்ரமை உருவாக்கும் பட்ஜெட் அறிவிப்புக்கு இணங்க, 'இஷ்ரம்-ஓரிடத் தீர்வு திட்டத்தை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புஇளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் 21.10.2024 அன்று.தொடங்கிவைக்கிறார்.

இஷ்ரம்-ஓரிடத் தீர்வு திட்டம் என்பது, பல்வேறு அரசு திட்டங்களை அமைப்புசாரா தொழிலாளர்கள் எளிதாக அணுகுவதை உறுதிசெய்யும் வகையில் செயல்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த முன்முயற்சி உதவும்.

2021, ஆகஸ்ட் 26  அன்று -ஷ்ரம் தொடங்கப்பட்டதிலிருந்து, 30 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்களுடன் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அது எட்டியுள்ளது. இந்த முன்முயற்சியின் சமூக தாக்கத்தையும், தேசத்தின் அமைப்புசாரா தொழிலாளர்களை ஆதரிப்பதில் அரசின் அர்ப்பணிப்பையும் இந்த சாதனை சுட்டிக் காட்டுகிறது.

********

SMB/ KV

 

 

 

 

 



(Release ID: 2066495) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Hindi , Gujarati