சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியஸ்தம் மற்றும் சமரச (திருத்த) வரைவு மசோதா, 2024 மீது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

Posted On: 18 OCT 2024 4:24PM by PIB Chennai

நாட்டில் தாவாக்களுக்கு தீர்வு காணும் சூழலை வலுப்படுத்தவும், எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்கவும், அவ்வப்போது சட்ட தலையீடுகள் மூலம் ஒப்பந்தங்களை அமல்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சட்ட விவகாரங்கள் துறை தற்போது மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டம் 1996-ல் மேலும் திருத்தங்களை பரிசீலித்து வருகிறது.

 

நிறுவன ரீதியான சமரச தீர்ப்புக்கு மேலும் ஊக்கமளிப்பது, சமரசங்களில் நீதிமன்றங்களின் தலையீட்டைக் குறைப்பது மற்றும் நடுவர் நடவடிக்கைகளை உரிய நேரத்தில் முடிப்பதை உறுதி செய்வது ஆகியவை இதன் நோக்கமாகும்.

 

இதைக் கருத்தில் கொண்டு, மத்தியஸ்தம் மற்றும் சமரச (திருத்தம்) மசோதா, 2024 மற்றும் தற்போதுள்ள ஏற்பாடு மற்றும் முன்மொழியப்பட்ட திருத்தத்தை சித்தரிக்கும் அட்டவணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வரைவு திருத்தங்கள் குறித்த பொது ஆலோசனை பயிற்சியின் ஒரு பகுதியாக இப்போது பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை மத்திய அரசு வரவேற்கிறது. வரைவு மசோதா மற்றும் அட்டவணை அறிக்கையை https://legalaffairs.gov.in/ இல் அணுகலாம். வரைவு மசோதா பற்றிய கருத்துக்களை avnit.singh[at]gov[dot]in  மற்றும் ndiac-dla[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் மூலம் 03.11.2024 க்குள் அனுப்பலாம்.

***

(Release ID: 2066081)

PKV/AG/RR



(Release ID: 2066101) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi