நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை 'சிறப்பு இயக்கம் 4.0' ஐ மேற்கொண்டுள்ளது

Posted On: 18 OCT 2024 1:12PM by PIB Chennai

முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும் நிலுவையில் இருப்பவற்றைக் குறைப்பதற்கும் 2024 அக்டோபர் 2 முதல்31வரை 'சிறப்பு இயக்கம் 4.0' நடத்துகிறது.

 

மிக முக்கியப் பிரமுகர்களின் குறிப்புகள், பொதுமக்கள் குறைகளைத் தீர்க்க இத்துறை கண்டறிந்த குறியீடுகள் முழுமையாக எய்தப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 

ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்ட 274 கோப்புகளில், இதுவரை 62 கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு முடித்துவைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, பயனற்ற / பயன்படுத்த இயலாத பொருட்களை அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

இத்துறையுடன்  எந்த துணை அமைப்புகளோ அல்லது தன்னாட்சி அமைப்புகளோ இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

***

(Release ID: 2066007)

PKV/AG/KR



(Release ID: 2066017) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi , Punjabi