எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய மின்துறை நிலவரம் 2047 குறித்த விவாத அமர்வில் திரு மனோகர் லால் உரையாற்றினார்

Posted On: 14 OCT 2024 5:18PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய மின்துறை சூழல் 2047 குறித்த விவாத அமர்வில், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் உரையாற்றினார்.

இந்திய மின்துறை சூழல் 2047 குறித்த இரண்டு நாள் விவாத அமர்வில், மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு மனோகர் லால், நாட்டின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அரசின் திட்டமிடலை சுட்டிக்காட்டினார்.

 

"2047-ம் ஆண்டில், நமது மின் தேவை 708 ஜிகாவாட்டை எட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதை எதிர்கொள்ள, நாம் நமது திறனை நான்கு மடங்கு, அதாவது 2,100 ஜிகாவாட் அதிகரிக்க வேண்டும், "என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கூறினார்.

 

இந்தியாவின் எதிர்கால மின் தேவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கிய பங்கை மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். "2030-ம் ஆண்டுக்குள், 500 ஜிகாவாட் புதைபடிவம் அல்லாத எரிசக்தி திறனை இலக்காக நிர்ணயித்துள்ளோம், இது தற்போதைய திறனை திறம்பட இரட்டிப்பாக்குகிறது" என்று அவர் கூறினார். பசுமை எரிசக்திக்கான இந்த முயற்சி 2030-க்குள் கார்பன் உமிழ்வை ஒரு பில்லியன் டன் குறைப்பதற்கும், 2070-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர்திரு. ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், வளர்ந்து வரும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மின்சாரத் துறையை ஒருங்கிணைக்க உன்னிப்பாக திட்டமிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நீடித்த நிலைத்தன்மை இலக்குகளால் உந்தப்பட்டு, மாறுபட்ட மற்றும் தூய்மையான எரிசக்தி கலவையை நோக்கி விரைவாக மாற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். "புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பங்கள், எரிசக்தி சேமிப்பு தீர்வுகள் மற்றும் கட்டமைப்பு நவீனமயமாக்கல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படும்" என்று திரு நாயக் கூறினார்.

***  

 

IR/KPG/DL  



(Release ID: 2064763) Visitor Counter : 15


Read this release in: Odia , English , Urdu , Hindi , Punjabi