சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாலத்தீவின் முதல் பெண்மணி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்திற்கு வருகை தந்தார், உணவுப் பாதுகாப்பு குறித்த முன்முயற்சிகளுக்கு பாராட்டு

प्रविष्टि तिथि: 07 OCT 2024 6:35PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ), எப்.டி.. பவனில் உள்ள எப்எஸ்எஸ்ஏஐ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு வந்திருந்த மாலத்தீவு குடியரசின் முதல் பெண்மணி திருமதி சஜிதா முகமது மற்றும் அவரது குழுவினரை வரவேற்கும் கவுரவத்தைப் பெற்றது.

இந்த சந்திப்பின் போது, திருமதி சஜிதா முகமது கோடக்ஸ் அலிமென்டேரியஸ் கமிஷனுக்கான இந்தியாவின் தொடர்பு புள்ளியுடன் சுவாரஸ்யமான கலந்துரையாடலை மேற்கொண்டார், உணவு பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தார். நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்வதற்காக எப்எஸ்எஸ்ஏஐ-ல் நிறுவப்பட்ட ஆய்வக சுற்றுச்சூழல் அமைப்புகள் குறித்து முதல் பெண்மணிக்கு விளக்கப்பட்டது. மாலத்தீவின் உணவுப் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு அளிப்பது மாலத்தீவுக்கு நன்மை பயக்கும் என்று முதல் பெண்மணி குறிப்பிட்டார்.

கூட்டத்தின் ஒரு பகுதியாக, எஃப்.எஸ்.எஸ்.. அதன் முதன்மை முயற்சியான நடமாடும் உணவு பாதுகாப்பு   திட்டத்தின் சுருக்கமான செயல்விளக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இது ஒரு நடமாடும் உணவு சோதனை ஆய்வகம், இது அந்த இடத்திலேயே உணவு பாதுகாப்பு சோதனைகளை நடத்துவதற்கும், நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான கருவியாக செயல்படுகிறது. முதல் பெண்மணி இந்த முயற்சிக்கு தனது பாராட்டை தெரிவித்ததுடன், அடிமட்டத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.

***

MM/AG/DL


(रिलीज़ आईडी: 2062945) आगंतुक पटल : 103
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी