பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தையொட்டி ரத்ததான முகாமுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2024 6:21PM by PIB Chennai

தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு 2024 அக்டோபர் 1-ம் தேதி புதுதில்லியின் சவுத் பிளாக்கில் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்தது, இது தில்லி கன்டோன்மென்ட்டில் அமைந்துள்ள ஆயுதப்படை மருத்துவ சேவைகள் அமைப்பான ஆயுதப்படை மாற்று மையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான பிரச்சார முழக்கம் "கொடையின் 20 ஆண்டு கொண்டாட்டம்: ரத்த கொடையாளர்களுக்கு நன்றி" என்பதாகும். இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த மொத்தம் 183 தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்தனர்.

முகாம் சுமூகமாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நன்கு தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த 3 மருத்துவ அதிகாரிகள், ஒரு இணை ஆணைய அதிகாரி மற்றும் 10 துணை மருத்துவ ஊழியர்கள் (ரத்த மாற்று உதவியாளர்கள்) ஆகியோர் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏற்பாடுகளுடன் ஈடுபடுத்தப்பட்டனர்.

***

PKV/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2060846) வருகையாளர் எண்ணிக்கை : 74
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी