சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் சிறப்புக் கல்வியில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் புதுதில்லியில் நாளை கௌரவிக்கிறார்

Posted On: 30 SEP 2024 3:59PM by PIB Chennai

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் உள்ள மறுவாழ்வுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBER) மற்றும் இந்திய மறுவாழ்வு கவுன்சில் (RCI) புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அக்டோபர் 1, 2024 அன்று பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளன. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை தாங்குகிறார். மத்திய இணையமைச்சர்கள் திரு பி.எல்.வர்மா மற்றும் திரு ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். இந்த பட்டமளிப்பு விழா, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் சிறப்புக் கல்வித் துறையில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ நிலைகளில் தேசிய அளவில் முதலிடம் பெறுபவர்களை அங்கீகரிக்கும்.

ஜூன் 2024-ல் நடத்தப்பட்ட தேசிய மறுவாழ்வு தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் 2024 இல் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்க என்.பி..ஆர் மற்றும் ஆர்.சி. இப்போது ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்குகின்றன. சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு சேவைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதே இந்த பட்டமளிப்பு விழாவின் முதன்மை நோக்கமாகும். இந்த நிகழ்வு கல்வியின் புத்திசாலித்தனத்தை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை அர்ப்பணிப்பை வலியுறுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும். தேசிய முதலிடம் பெற்ற மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும், இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.

***

(Release ID: 2060283)

SRI/MM/AG/RR


(Release ID: 2060307) Visitor Counter : 45


Read this release in: English , Urdu , Hindi