பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், நாளை புதுதில்லியில் அனைவருக்குமான வளர்ச்சி குறித்த மக்கள் திட்ட இயக்கம் தொடர்பான  தேசியப் பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார்

Posted On: 29 SEP 2024 12:46PM by PIB Chennai

 

மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நாளை (2024 செப்டம்பர் 30) அனைவருக்குமான வளர்ச்சி தொடர்பான மக்கள் திட்ட இயக்கம் (சப்கி யோஜனா சப்கா விகாஸ்) குறித்த தேசிய பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார். மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், குடிநீர் துப்புரவு துறை செயலாளர் வினி மகாஜன், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

 பயனுள்ள பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான திறன்களுடனும் உத்திகளுடனும் அதிகாரிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும்  பிற பங்குதாரர்களையும் ஆயத்தப்படுத்துவதற்காக இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இதன் அடப்படையில் இந்த இயக்கம் குறித்த தேசிய பயிலரங்கை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.

இந்த பயிலரங்கு பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுத் துறைகளின் பிரதிநிதிகள், பயிற்சி நிறுவனங்களின் ஆசிரியர்கள், பஞ்சாயத்துகளின் பல்வேறு நிலைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும்.

*****

PLM/ KV

 

 



(Release ID: 2060062) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi , Manipuri