வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பெங்களூருவில் நடைபெறும் வடகிழக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டு சாலைக் கண்காட்சியில் திரு. ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்கிறார்

Posted On: 25 SEP 2024 7:17PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் (MDoNER) செப்டம்பர் 26, 2024 அன்று பெங்களூரில் வடகிழக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டு சாலைக்கண்காட்சி ஏற்பாடு செய்கிறது, இது ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா, எம்.டி.என்.இ.ஆர்., மூத்த அதிகாரிகள் , செயலாளர் திரு சஞ்சல் குமார், இணைச் செயலாளர் சுஷ்ரி மோனாலிசா தாஷ் ஆகியோரும், பல்வேறு வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.

வடகிழக்கு மாநில அரசுகள், ஃபிக்கி (தொழில்துறை பங்குதாரர்) மற்றும் இன்வெஸ்ட் இந்தியா (முதலீட்டு வசதி பங்குதாரர்) ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளின் விளக்கக்காட்சிகளைக் கொண்ட பெங்களூரில் இது நான்காவது பெரிய சாலைக் கண்காட்சியைக் குறிக்கிறது. அவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்துவார்கள்.

தகவல் தொழில்நுபட்ம் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், எரிசக்தி ஆகியவை முக்கிய முதலீடு செய்யக்கூடிய துறைகளில் அடங்கும் - இவை அனைத்தும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானவை.

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு, முதலீடுகளை ஈர்ப்பதையும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மும்பை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் முந்தைய சாலைக் கண்காட்சிகள் வலுவான பங்கேற்பைப் பெற்றன, அதே நேரத்தில் குஜராத்தில் மாநில கருத்தரங்கு சாத்தியமான முதலீட்டாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க ஆர்வத்தை ஈர்த்தது.

இந்த முயற்சிகளை கட்டியெழுப்ப, மார்ச் 6, 2024 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்யும் நிகழ்வை நடத்தியது , இது மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளுடன் வணிகத்திற்கு இடையிலான (B2G) கூட்டங்களுக்கு வழிவகுத்தது.

பெங்களூருவில் நடைபெறும் சாலைக்கண்காட்சி வடகிழக்கு இந்தியாவில் வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க ஆர்வமுள்ள பல முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

------------------

PKV/RS/KV



(Release ID: 2058934) Visitor Counter : 7