சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை இயக்கம்: சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு பங்கேற்பு

Posted On: 25 SEP 2024 4:36PM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் நலன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் ஆகியோர் புதுதில்லியில் உள்ள சிஜிஓ வளாகத்தில் இன்று நடைபெற்ற தூய்மையே சேவை இயக்கத்தில் பங்கேற்றனர்.

 

சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். சுற்றுச்சூழலை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது அமைச்சகத்தின் வழக்கமான நடைமுறையாக இருக்க வேண்டுமென்று அமைச்சர் வலியுறுத்தினார்.

 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" நடும் இயக்கத்தின் கீழ் மரக்கன்றையும் நட்டனர். சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் 1000 தூய்மை இலக்கு அலகுகளை (CTUs) இலக்காகக் கொண்டுள்ளது. அந்த இலக்கை அடைவதை நோக்கி துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

 

***

PLM/RR/KR/DL


(Release ID: 2058693) Visitor Counter : 54


Read this release in: English , Urdu , Hindi