மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த மாநில திறன் மேம்பாட்டு பயிலரங்கு

Posted On: 24 SEP 2024 11:23AM by PIB Chennai

உத்தராகண்ட் அரசின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான மூன்று நாள் சைபர் பாதுகாப்பு மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த பயிலரங்கு டேராடூனில் உள்ள சிவில் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டில் செப்டம்பர் 23 முதல் 25 வரை நடைபெறுகிறது.

மாநிலத் துறைகளைச் சேர்ந்த 25 பங்கேற்றனர். இந்தப் பயிலரங்கை உத்தராகண்ட் அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு முகமை (ஐ.டி.டி.ஏ), தேசிய மின்-ஆளுமை பிரிவு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் பயிலரங்கை ஐ.டி.டி.ஏ.வின் இயக்குநர் திருமதி நித்திகா கண்டேல்வால் தொடங்கி வைத்தார். மாநிலத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மின்-ஆளுமை சேவைகளைப் பாதுகாப்பதில் இணையப் பாதுகாப்பின் முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார். அரசுத் துறைகள் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களை சமாளிக்க அரசு அதிகாரிகளிடையே திறனை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

சைபர் பாதுகாப்பு பயிற்சி

இந்த பயிற்சித் திட்டம் மாநில அரசு அதிகாரிகளிடையே இணைய பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட  மாநில திறன் மேம்பாட்டுத் தொடரின் ஒரு பகுதியாகும். சைபர் அபாயங்களைத் திறம்பட நிர்வகிப்பதற்கும் தணிப்பதற்கும் தேவையான திறன்களையும் அறிவையும் அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம் அரசுத் துறைகளின் இணைய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

இந்தப் பயிலரங்கு பரந்த அளவிலான இணைய பாதுகாப்பு தலைப்புகளை உள்ளடக்கியது, முக்கியமான அரசு உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. அரசுத் துறைகளின் இணைய பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துகிறது.

பங்கேற்பாளர்கள் தேசிய சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் தரநிலைகளை கடைப்பிடிப்பதற்கான வழிகாட்டுதலைப் பெறுவார்கள்.

இந்தப் பயிற்சியில் சைபர் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் உத்தராகண்டில் உள்ள அரசுத் துறைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்திகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடைமுறை அமர்வுகள் அடங்கும்.

சைபர் பாதுகாப்பு தணிக்கைகள், தரவு ஆளுமை மற்றும் மேலாண்மை கட்டமைப்புகள் குறித்த கூடுதல் அமர்வுகளுடன் பயிலரங்கு தொடரும். இது அரசு அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான பங்கேற்பாளர்களின் திறனை மேலும் வலுப்படுத்துகிறது.

இந்தப் பயிலரங்கு உத்தராகண்ட் அரசுக்கு வலுவான இணைய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படிநிலையைக் குறிக்கிறது. சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், மாநில அரசுகளிடையே திறன்களை வளர்ப்பதற்கும்,டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் கீழ் பாதுகாப்பான மற்றும் டிஜிட்டல் ரீதியாக அதிகாரம் பெற்ற இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வைக்கு பங்களிப்பதற்கும் என்இஜிடியின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது.

***

(Release ID: 2058125)
PKV/RR



(Release ID: 2058150) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi