ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருந்துகள் துறை சார்பில் நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்து குறைகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் - 2024 அக்டோபர் 02 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 15 SEP 2024 12:02PM by PIB Chennai

மருந்துத் துறை, அதனுடன் இணைந்த அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை இணைந்து, 2024 அக்டோபர் 02 முதல் 2024 அக்டோபர் 31 வரை நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்து குறைகளைத் தீர்த்து, கோப்புகளை முடித்து வைப்பதற்கான நான்காவது சிறப்பு இயக்கத்தில் பங்கேற்கின்றனநிர்வாக சீர்திருத்தம் - பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (DARPG) நிர்ணயித்த இலக்குகளை அடைவதில் முந்தைய இயக்கங்களின்போது குறிப்பிடத்தக்க சாதனைகள் எட்டப்பட்டன. அதன் அடிப்படையில் நிலுவையில் உள்ள அனைத்து விஷயங்களையும் நிவர்த்தி செய்வதை இந்த ஆண்டின் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

முந்தைய சிறப்பு இயக்கம் 3.0-ன் சாதனைகள்:

*நிலுவையில் இருந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்புகளில் 13-க்கு பதிலளித்தது.

*800 பொது குறைகளில் 731 தீர்க்கப்பட்டன.

*87 பிஜி மேல்முறையீடுகளில் 78 மூடப்பட்டன.

*20 நாடாளுமன்ற வாக்குறுதிகளில் 11 நிறைவேற்றப்பட்டன.

* 9,600 மக்கள் மருந்தக மையங்கள் உட்பட நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 9,651 வெளிப்புற பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.

*5,823 இயற்பியல் கோப்புகளை மதிப்பாய்வு செய்து, 1,400 முடிக்கப்பட்டன.

*தேவையற்ற பொருட்கள் அகற்றல் மூலம் ரூ. 3,71,387 வருவாய் ஈட்டப்பட்டது.

*****

PLM/ KV

 

 


(रिलीज़ आईडी: 2055173) आगंतुक पटल : 103
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Marathi , English , Urdu