விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் அனைத்து அலுவலகங்களும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை 'தூய்மையே சேவை 2024 பிரச்சாரத்தைக்' கொண்டாட முடிவு செய்துள்ளன

प्रविष्टि तिथि: 14 SEP 2024 11:46AM by PIB Chennai

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 'தூய்மையே சேவை 2024 (SHS 2024)  பிரச்சாரம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை அனுசரிக்கப்படும், அதன்பிறகு தூய்மை இந்தியா தினம் 2024, அக்டோபர் 2 அன்று கொண்டாடப்படும்.

முழுமையான சமுதாயம்' என்ற அணுகுமுறையைப் பயன்படுத்தி, மக்களின் பங்களிப்பை வலியுறுத்தி, சுகாதாரத்தை ஒவ்வொருவரின் கடமையாக மாற்றும் தூய்மையே சேவை இயக்கம் இந்த ஆண்டு நடத்தப்படும். சிரமதானம் மற்றும் ஆதரவு முயற்சிகளுக்கு மேலதிகமாக, தூய்மையான மித்ரா பாதுகாப்பு முகாம்களை ஏற்பாடு செய்வதிலும், அடையாளம் காணப்பட்ட தூய்மை இலக்கு அலகுகளை மாற்றுவதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகத்தின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைதூய்மையே சேவை 2024 பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்கும். நாடு முழுவதும் உள்ள அதன் அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கள அலுவலகங்களில் 400 க்கும் மேற்பட்ட தூய்மை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணிகளில் மக்களின் பங்களிப்பு, தூய்மை மித்ரா  பாதுகாப்பு முகாம்கள், முதலியவை இந்த நிகழ்ச்சிகளில் இடம்பெறும்.

தூய்மை  சார்ந்த உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்வதுவீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை  மேற்கொள்வதுதாயின் பெயரில் மரம் திட்டம், மனித சங்கிலி அமைப்புகள்மக்களின் பங்களிப்புடன்  தூய்மை இயக்கங்கள் போன்ற முக்கிய  முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும்..

*****

BR/ KV

 

 

 


(रिलीज़ आईडी: 2054877) आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu