கலாசாரத்துறை அமைச்சகம்
ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் இலக்கிய மன்றம் 2024-ல் இந்தியா பங்கேற்பு
Posted On:
13 SEP 2024 5:12PM by PIB Chennai
பிரிக்ஸ் இலக்கிய மன்றம் 2024 ரஷ்யாவின் கசானில் 11 செப்டம்பர் 2024 புதன்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டை கசான் நகர மேயர் இல்சூர் மெட்சின் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இலக்கிய பிரிக்ஸ்-ன் 2024 பதிப்பின் கருப்பொருள், "புதிய யதார்த்தத்தில் உலக இலக்கியம், மரபுகள், தேசிய விழுமியங்கள் மற்றும் கலாச்சாரங்களின் உரையாடல்." பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், தத்துவவாதிகள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோரின் சங்கமமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. இந்தியா சார்பில், சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கௌசிக் மற்றும் சாகித்ய அகாடமியின் செயலாளர் டாக்டர் கே. சீனிவாசராவ் ஆகியோர் பங்கேற்றனர். முழுமையான அமர்வில், திரு மாதவ் கௌசிக், இன்றைய உலகில் இலக்கியம் எவ்வாறு முக்கியமானது என்பதையும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் இலக்கியம் எவ்வாறு இயக்குகிறது என்பதையும் விளக்கினார்.
"வோல்கா முதல் கங்கை வரை: பாரம்பரியம் மற்றும் பன்முக கலாச்சாரத்தின் கொண்டாட்டம்" என்ற தலைப்பில், எவ்ஜெனி அப்துல்லேவ்-வை நடுவராகக் கொண்டு இந்திய பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய இரண்டாவது நிகழ்வில், டாக்டர் கே.சீனிவாசராவ் உலகெங்கிலும் உள்ள நதி சார்ந்த கலாச்சாரங்கள், எவ்வாறு பன்முக கலாச்சாரத்தை ஊக்குவிக்கின்றன என்பதையும், பன்முக கலாச்சாரம் எவ்வாறு ஒற்றுமையை ஊக்குவிக்கிறது, சமூக முன்னேற்றத்தை எவ்வாறு இயக்குகிறது என்பதையும் எடுத்துரைத்தார். அதே நேரத்தில் திரு மாதவ் கௌசிக், இந்தியா மற்றும் ரஷ்யாவின் பாரம்பரிய இலக்கியம் மற்றும் அவற்றில் எவ்வாறு பன்முக கலாச்சாரத்தை உள்ளடக்கியது என்பதை எடுத்துரைத்தார் மதிப்புகள்.
***
MM/KPG/DL
(Release ID: 2054679)