பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்


பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு

Posted On: 06 SEP 2024 8:45PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய திரு நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

அது குறித்துப் பிரதமர் அலுவலகம்  சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் நிகழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் ஒவ்வொரு உறவினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்"  

*****

PLM/DL
 



(Release ID: 2052846) Visitor Counter : 25