பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-கென்யா 3-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம்

प्रविष्टि तिथि: 03 SEP 2024 5:05PM by PIB Chennai

இந்தியா மற்றும் கென்யா இடையேயான கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு (JDCC) கூட்டத்தின் மூன்றாவது பதிப்பு, செப்டம்பர் 3, 2024 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இரு நாடுகளும் ராணுவ ஒத்துழைப்பு, பயிற்சி, பாதுகாப்பு தொழில்கள், R&D போன்ற துறைகளில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பரந்த அளவிலான வாய்ப்புகள் குறித்து விவாதித்தன.

கென்ய தூதுக்குழு, இந்திய பாதுகாப்பு தொழில்துறை பிரதிநிதிகளை டெல்லியில் சந்தித்தது. இந்த தூதுக்குழு, புனேவுக்கும் செல்ல உள்ளது. அங்கு அவர்கள் பாதுகாப்பு தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் திறன்களின் முதல் அனுபவத்தைப் பெறுவார்கள்.

கென்யாவுடன் இந்தியா நீண்டகால, நட்பு மற்றும் நெருக்கமான உறவை பகிர்ந்து கொள்கிறது. ஜூலை 2016-ல் கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், பரஸ்பர நலனுக்காக, பாதுகாப்புத் துறையின் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பதற்கான சட்டரீதியான கட்டமைப்பை வழங்கியுள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான பயனுள்ள திட்டத்தை உருவாக்குவதற்கும், ஜே.டி.சி.சி ஒரு சிறந்த முயற்சியாகும். இந்திய தரப்புக்கு இணைச் செயலாளர் திரு அமிதாப் பிரசாத்தும், கென்ய தரப்புக்கு மேஜர் ஜெனரல் டேவிட் கிப்கெம்போய் கெட்டரும் தலைமை தாங்கினர்.

***

MM/AG/DL


(रिलीज़ आईडी: 2051376) आगंतुक पटल : 79
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी