தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய தொழிற்சங்க அமைப்புகளுடன் வட்டமேஜை கூட்டம்: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்

Posted On: 28 AUG 2024 7:20PM by PIB Chennai

மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற வட்டமேஜை கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொழிற்சங்கங்களுடனான இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், அண்மையில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் (இஎல்ஐ), பிற தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக தொழிலாளர் சக்தி உள்ளது என்று கூறிய அவர், தொழிலாளர்களின் நலனுக்கா திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு உறுதிபூண்டுள்ளது என்றார். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் குரலாக செயல்படுகின்றன. என்றும் அவர் கூறினார்.

உத்தேச இஎல்ஐ திட்டம் குறித்தும் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இஎல்ஐ திட்டம் குறித்து தொழிற்சங்கங்களிடமிருந்து ஆலோசனைகளை அமைச்சர் வரவேற்றார். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கவும் இஎல்ஐ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.

***

PLM/AG/DL


(Release ID: 2049534)
Read this release in: English , Urdu , Hindi , Marathi