பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்திய கடற்படை கப்பல் தபார் 2 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டின் மலகா சென்றடைந்துள்ளது

Posted On: 27 AUG 2024 9:30AM by PIB Chennai

கேப்டன் எம்.ஆர்.ஹரிஷ் தலைமையிலான இந்திய கடற்படையின் முன்னணி ஸ்டெல்த் போர்க்கப்பல், .என்.எஸ் தபார் இரண்டு நாள் பயணமாக ஆகஸ்ட்  24, 25 அன்று ஸ்பெயினின் மலகாவுக்கு சென்றடைந்தது. இந்தியாவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான தூதரக உறவுகள் 1956 ஆம் ஆண்டில் புதுதில்லியில் ஸ்பெயின் தூதரகம் திறக்கப்பட்டதன் மூலம் நிறுவப்பட்டன. ஸ்பெயினின் பெரிய கடற்கரை காரணமாக ஸ்பெயினின் கடல்சார் பாதுகாப்பின் முக்கியப் பொறுப்பை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. பல்வேறு ஆக்கபூர்வமான மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் ஸ்பெயினுடன் ஈடுபட்டு வருகிறது. ஐஎன்எஸ் தபாரின் வருகை இந்த உறவுகளை வலுப்படுத்துவதையும், கடல்சார் களத்தில் உறவை வலுப்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

மலகா துறைமுகத்தில் தங்கியிருக்கும் இரண்டு நாட்களில், கப்பலின் குழுவினர் ஸ்பெயின் கடற்படையுடன் பல தொழில்முறை தொடர்புகளை மேற்கொள்வார்கள். பின்னர், மலகாவிலிருந்து புறப்படும் இந்திய கடற்படை கப்பல் தபார், ஸ்பெயின் கடற்படை கப்பல் அடாலயாவுடன் கடலில் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளும் .

 

இந்தப் பயிற்சி மற்றும் கலந்துரையாடல்கள் இரு கடற்படைகளுக்கிடையேயான இயங்குதன்மையை மேம்படுத்த முயல்வதுடன், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் 'சிறந்த நடைமுறைகளை' கவனித்து பின்பற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்கும். உலகெங்கிலும் உள்ள கடற்படைகளுடன் கூட்டாண்மையை வளர்ப்பதில் இந்திய கடற்படை உறுதிபூண்டுள்ளது.

.என்.எஸ் தபார், பல்துறை அளவிலான ஆயுதங்கள் மற்றும் சென்சார்களைக் கொண்டுள்ளது. மேலும் அது இந்திய கடற்படையின் ஆரம்பகால ஸ்டெல்த் போர்க்கப்பல்களில் ஒன்றாகும். இந்தக் கப்பல் மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் மும்பையை தளமாகக் கொண்ட இந்திய கடற்படையின் ஒரு பகுதியாகும்.

***

(Release ID: 2049200)
PKV/RR/KR



(Release ID: 2049265) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Marathi , Hindi