தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்களிப்பை மேம்படுத்துதல் குறித்த பணிக்குழுவின் 7-வது கூட்டத்தை மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்தியது

Posted On: 23 AUG 2024 7:38PM by PIB Chennai

"இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்களிப்பை மேம்படுத்துதல்" குறித்த பணிக்குழுவின் 7வது கூட்டம் 23 ஆகஸ்ட் 2024 அன்று புதுதில்லியில் உள்ள தொழிலாளர் - வேலைவாய்ப்பு அமைச்சக அலுவலகத்தில் கூட்டப்பட்டது. தொழிலாளர் - வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

தமது தொடக்க உரையில் அவர், தொழிலாளர் பிரிவில் பெண்களின் பங்கேற்பு பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகிறது உன்றும் தொழில்களில் பணியிட பன்முகத்தன்மையை வளப்படுத்துகிறது என்றும் கூறினார். பெண் தொழிலாளர் பங்களிப்பை ஊக்குவிப்பது சமூக நீதியுடன் சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்களிப்பின் தற்போதைய நிலை குறித்து விவாதிப்பதற்கும், முக்கிய சவால்களை அடையாளம் காண்பதற்கும், முன்னேற்றத்திற்கான சாத்தியமான உத்திகளை ஆராய்வதற்கும் இந்த கூட்டம் ஒரு தளத்தை வழங்கியது.

இந்த கூட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்), சுயதொழில் புரியும் பெண்கள் சங்கம் (சேவா), பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்), புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகம் (எம்ஓஎஸ்பிஐ) உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

 

**********************

PLM/KV



(Release ID: 2048448) Visitor Counter : 14


Read this release in: Telugu , English , Urdu , Hindi